கரூர், பிப். 27: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடப்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அடுத்துள்ள நடுகுளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே 70வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக இந்த பகுதி விஏஓ வெங்கமேடு காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற வெங்கமேடு போலீசார் அடையாளம் தெரியாத நிலையில் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து இறந்து கிடந்தவர் யார்?
என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.