கேடிசி நகர், ஜூன் 28: சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வீராணபுரAம் கீழ தெருவை சேர்ந்தவர் சன்னாசி (65). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் கால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சன்னாசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.