விருதுநகர், ஜூலை 6: விருதுநகரில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது. விருதுநகர் தர்காஸ் தெருவை சேர்ந்தவர் மஹரிபாபானு(80). இவரது கணவர் 8 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் தனியே வசித்து வந்தார். சிவகாசியில் வசித்து வரும் மகன், மகள் இருவரும் அடிக்கடி வந்து தாயை பார்த்து சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மஹரிபாபானுவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அருகில் வசிப்பவர்கள் அவரது மகன் ஜாகிர் உசேனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது மஹரிபாபானு உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜாகிர்உசேன் அளித்த புகாரில் விசாரித்து வருகின்றனர்.