திருச்சி, அக்.17: திருச்சியில் வீடு புகுந்து பணம், செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணியநகரை சேர்ந்தவர் புகழேந்தி(54). இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், வீட்டுக்குள் நுழைந்து அறையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் ரூ.300ஐ திருடி சென்றார். இதுகுறித்து புகழேந்தி அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து எடமலைப்பட்டிபுதூர் செட்டியப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி(40) என்பவரை கைது செய்தனர்.