நெல்லை: களக்காடு அருகே படலையார் குளத்தை சேர்ந்தவர் கண்ணன் (50). விவசாயி. இவருக்கும் இவரது அண்ணன் நம்பிராஜனுக்கும் (55) சொத்து பிரச்னை இருந்தது. சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நம்பிராஜன், அவரது 16 வயது மகன் ஆகியோர் சேர்ந்து கண்ணனை கம்பால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து நம்பிராஜன் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.