ஏற்காடு, பிப்.13: ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், அட்மா திட்டத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி குறித்து 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அட்மா தலைவர் தங்கசாமி தலைமை வகித்தார். செந்தில்குமார் சிறுதானிய பயிரில் விதைப்பு முதல், அறுவடை வரை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முறை, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு, சந்தை படுத்தும் முறை குறித்து எடுத்துரைத்தார். வேளாண் உதவி இயக்குநர் தங்கராஜ், வேளாண் இணை இயக்குனர் காயத்ரி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
0