விருதுநகர், ஜூன் 23: விருதுநகர் பர்மா காலனி சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் முகம்மது அஸ்லம் (16). இவர் விருதுநகர் சூலக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது நண்பர்களுடன் புல்லாலக்கோட்டை சாலையோரத்தில் உள்ள தனியார் தோட்டத்தின் கிற்றில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊரக காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.