விராலிமலை, செப்.15: விராலிமலை அருகே பைக் மோதி பெண் பலியானார். விராலிமலை அருகே உள்ள பகவான் பட்டியை சேர்ந்தவர் குழந்தை மனைவி அழகம்மாள் (55). இவர் நேற்று காலை சொந்த வேலை காரணமாக வெளியே செல்வதற்காக பகவான் பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அழகம்மாள் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அழகம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.