தேனி, மே 30: தேனி மாவட்டம், சுருளிபட்டியை சேர்ந்தவர் குமரவேல்(65). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் டூவீலரில் தேனி அருகே கோட்டூரில் உள்ள திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வந்த கார், விவசாயி குமரவேல் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியதில் குமரவேல் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைத்தனர்.இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.