தேவகோட்டை, அக்.14: தேவகோட்டை அழகாபுரி தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(25). இவர் காரைக்குடியில் பயின்று வரும் 16 வயது பள்ளி மாணவனுடன் கடந்த 7ம் தேதி அனுமந்த குடியிலிருந்து தேவகோட்டை நோக்கி வரும்போது சித்தானூர் சாலை அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி இருவரும் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.