Tuesday, June 24, 2025
Home மாவட்டம்திருநெல்வேலி வாழைக்கு மருந்து தெளித்த விவசாயி மயங்கி விழுந்து சாவு

வாழைக்கு மருந்து தெளித்த விவசாயி மயங்கி விழுந்து சாவு

by Ranjith

 

கேடிசி நகர், மே 29: நாங்குநேரி அருகே வாழைக்கு மருந்து தெளித்த விவசாயி மயங்கி விழுந்து திடீரென இறந்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணம் அடுத்துள்ள பரப்பாடி இலங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (44) விவசாயி. இவருக்கு மனைவி ராமலட்சுமி மற்றும் மகன் சுரேஷ் (7) உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கண்ணன் வயலுக்கு சென்று அங்கு பயிரிட்டுள்ள வாழைக்கு களைக்கொல்லி மருந்து தெளித்தார்.

அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள், சுரே சை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi