கோவை: கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் சந்தோஷ் (40), தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதன் காரணமாக அவர் பணமில்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டார். இதனால், மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.