சிவகாசி, மே 6: சிவகாசி அருகே வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி குருசரவணராஜா (21). இவர் சம்பவத்தன்று எஸ்என்புரம் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருத்தங்கல் அண்ணாகாலனியை சேர்ந்த முத்துக்குமார்(21), பாலகிருஷ்ணன், கார்த்தீஸ்வரன் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். இது குறித்து திருத்தங்கல் போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.