நாகர்கோவில், ஜன.19: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது: தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ,வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின்படி, மாநில அளவில் பொது மக்களுக்கான இந்திய தேர்தல்கள் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி வருகிற 21-ம் தேதி காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விபரங்களை இன்றும், நாளையும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்துகொள்வதற்கு பங்கேற்பாளரின் கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்படவேண்டும். மேலும், விபரங்களுக்கு மாநில உதவி மைய எண்: 1800 4252 1950 மற்றும் மாவட்ட உதவி மைய எண்: 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, ஆர்வமுள்ள பொதுமக்கள் வினாடி வினா போட்டியில் பதிவு செய்து பங்கேற்கலாம்.
வாக்காளர் தின விழிப்புணர்வு வினாடி வினா போட்டி ஜன.21ம் தேதி நடக்கிறது
55