ஜெயங்கொண்டம், ஜூலை 5: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், அன்புச்செல்வன், பொறியாளர்கள் ராஜா சிதம்பரம், சித்ரா, ஊராட்சி மன்ற செயலாளர்கள், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் ஆர்.கலியபெருமாள் (ஆண்டிமடம் தெற்கு), செந்தில்குமார் (ஆண்டிமடம் மேற்கு), மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தருமதுரை மற்றும் அரசு அலுவலர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.