திருவண்ணாமலை, மார்ச் 1: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஊராட்சி உதவி இயக்குனர் சையத் பயாஸ் அகமது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், பிருத்திவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.