செய்முறை:கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பெருஞ்சீரகம், மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய பல்லாரியை சேர்த்து வதக்கவும். பல்லாரி வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். நன்றாக கழுவிய நாட்டுக்கோழி கறியை இத்துடன் சேர்த்து வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், அனைத்து தூள் வகைகள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் மிதமான சூட்டில் மூடி போட்டு சமைக்கவும். தேவைப்பட்டால் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். இத்துடன் அரைத்த கிராம்பு மசாலாவை சேர்ந்து 5 நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும். செமையான டேஸ்டில் வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு ரெடி.
வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு
83
previous post