மன்னார்குடி, மே 5: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் வடுவூர் தென்பாதி யில் இயங்கி வரும் குட்டை, நெட்டை தென்னை நாற்றங்கால் உற்பத்தி மையத்தில் அதிக மகசூல் தரும் தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் சத்யஜோதி தெரிவித்துள்ளார்.