காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்களுக்கு நிதி சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் மறு கட்டமைத்தல் பாதுகாப்பு அமலாக்க சட்டம் 2002 பயிற்சி நேற்று வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சிவமலர் தலைமை தாங்கினார்.
இதில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று, சட்டப்படி சொத்துக்களை எப்படி பாதுகாப்பது பற்றிய வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில், வங்கியின் பொது மேலாளர், துணைப்பதிவாளர், முதன்மை வருவாய் அலுவலர், உதவி பொதுமேலாளர்கள், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.