ஊத்தங்கரை, பிப்.25: ஊத்தங்கரை தாசில்தார் திருமால் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம், அனுமந்தீர்த்தம் லக்கம்பட்டி பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 6 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து, ஊத்தங்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, லாரியின் டிரைவரும், உரிமையாளருமான நல்லவம்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்தனர்.
லாரியில் மண் கடத்திய டிரைவர் கைது
0
previous post