கடலூர், ஏப். 18: வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்பாதை ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் இளமாறன். இவர் கடந்த 2013ம் ஆண்டு தனது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக கடலூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மின் பாதை ஊழியராக பணிபுரிந்த முனுசாமி என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது முனுசாமி, மின் இணைப்பு வழங்க இளமாறனிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து இளமாறன், கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்ததன் பேரில், மின் பாதை ஆய்வாளர் முனுசாமி மீது வழக்கு பதிவு செய்து, அவர் ரூ.1000 லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், முனுசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
லஞ்சம் வாங்கிய மின்பாதை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
0