ஓசூர், ஜூன் 11: ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்கூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.44.72 லட்சம் மதிப்பில், ஈச்சங்கூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை, அங்கன்வாடி மையம், கூசனப்பள்ளி கிராமத்தில் சிமெண்ட் சாலை, சொக்கநாதபுரம் கிராமத்தில் சிமெண்ட் சாலை, எலுவப்பள்ளி ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ பங்கேற்று, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் சம்பத்குமார், துணை செயலாளர் ரமேஷ், சேகர், சீனப்பா, ராஜப்பா, சிவக்குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரூ.44 லட்சத்தில் சாலை பணிகள் தொடக்கம்
0
previous post