கடத்தூர், ஏப்.28:கடத்தூரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வெற்றிலை சந்தை நடக்கிறது. சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். இங்கு மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி, கோம்பை, அஸ்தகியூர், முத்தனூர், கேத்திரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.13ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ரூ.8000 முதல் அதிகபட்சமாக ரூ.12,000 வரை விற்பனையானது கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.1000 விலை குறைந்தது. 26 மூட்டை வெற்றிலை ரூ.3.12 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ரூ.3.12 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை
0
previous post