மொடக்குறிச்சி, ஜூன்23:எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 79,269 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 58.65க்கும், அதிகபட்ச விலையாக 71.89க்கும், சராசரி விலையாக 70.85க்கும் ஏலம் போனது. மொத்தம் 31,238 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 583க்கு விற்பனை நடைபெற்றது.