Monday, July 14, 2025
Home மாவட்டம்கரூர் ராயனூர் நடுநிலைப்பள்ளியில் விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி

ராயனூர் நடுநிலைப்பள்ளியில் விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி

by Karthik Yash

கரூர், ஜூலை 30: ராயனூர் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சீருடைகளை வழங்கினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் நடுநிலைப்பள்ளியில் விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ராமநாதன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உட்பட அனைத்து அதிகாரிகளும், பள்ளி ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் ஞானஒளி நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi