செய்முறை:ராகி மாவு, கடலை மாவை நன்றாக தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி சிறுசிறு பூந்திகளாக வார்த்தெடுக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றி இடித்த பூண்டு, வேர்க்கடலை, கறிவேப்பிலை நன்றாக வறுத்து மீதமுள்ள மசாலாக்களை சேர்த்து பொரித்த பூந்தியுடன் நன்றாக கலந்து இறக்கி வைக்கவும்.