செய்முறை பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து பின் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் பிரியாணி மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும். அதன்பின் மொச்சைக் கொட்டை, நெய் விட்டு 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் மொச்சைக் கொட்டை பிரியாணி தயார். இறக்கியவுடன் எலுமிச்சம்பழம் சேர்க்கவும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.குறிப்பு: அரிசி மற்றும் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்த பிறகு பயன்படுத்தவும்.
மொச்சைக் கொட்டை பிரியாணி
62
previous post