சேந்தமங்கலம், ஜூலை 23: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குகுறிச்சியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(37), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2018ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பேளூக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து, தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேந்தமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்து, நேற்று நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பு வழங்கினார். அதில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தங்கராஜூக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ₹12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.