மூணாறு, ஜூன் 11: மூணாறு அருகே, தேயிலைத் தோட்டத்தில் உடல் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை எஸ்டேட் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத நடுத்தர வயதுயுடைய ஆணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் மூணாறு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மூணாறு போலீசார் வழக்கு பதிந்து, சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.