ஸ்பிக்நகர், நவ. 4: முத்தையாபுரம் குமாரசாமி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் காமராஜ்(48). இவர், வீட்டோடு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பு மாநகராட்சி ஊழியர்கள் வாறுகால் தோண்ட வரும்போது, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவரது வீட்டின் அருகே வசித்து வரும் தவசிவேல் என்பவர், காமராஜை அவதூறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த காமராஜ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.