முத்துப்பேட்டை, மே 28: முத்துப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலியானர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பாண்டியில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக எடையூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எடையூர் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். பிறகு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் ரயில்வே போலீசார் ரயில் அடிப்பட்டு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.