செய்முறைஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு அரைத்து பொடி செய்த மசாலாவை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். 30 முதல் 40 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி ஊற வைத்த மீன் துண்டுகளை 3 நிமிடம் வேக விடவும். பின் திருப்பி போட்டு கொத்தமல்லி, புதினா, Fried onion சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை; சேர்த்து அதன்மேல் Fried onion.; கொத்தமல்லி, புதினா தூவி மீதியான அரிசியை அதன்மேல் சேர்த்து Fried onion. புதினா, கொத்தமல்லி, நெய் மற்றும் குங்குமப்பூ சாறு சேர்த்து 15-20 நிமிடம் தம் போட வேண்டும். இப்போது கமகமக்கும் சுவையான மீன் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் மீன் வறுவல் சேர்த்து பரிமாறவும்.குறிப்பு: மீன் பிரியாணி செய்யும்போது அரிசியை வேக வைக்கும் முன், கடாயில் சிறிதளவு எண்ணெய், பட்டை – 1, பிரியாணி இலை – 1, ஏலக்காய் – 1, நட்சத்திர சோம்பு -1, கருப்பு சீரகம் – 1 டீஸ்பூன் சேர்த்து கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
மீன் பிரியாணி
50
previous post