சிங்கம்புணரி, பிப்.22: சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவோணம் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிவனடியார் கூட்டம் ஓதுவார் பாடல்கள் பாடினர். நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் முறையூர் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.