சிவகங்கை, ஆக. 20: காரைக்குடியில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் ஆக.22ல் நடக்க உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, காரைக்குடி மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் ஆக.22, காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.