மானாமதுரை, ஜூலை 6: சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது. மானாமதுரை கோட்டத்தில் மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூலை 8ம் தேதி காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மின் பயனீட்டாளர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் மின் வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.