ஒட்டன்சத்திரம், ஆக. 26: ஒட்டன்சத்திரம் கே.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கண்ணன் (35). இவர் பெயிண்டிங் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வாகனத்திற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது பெயிண்டிங் மிஷினில் இருந்த மின்வயர் அறுந்ததில் வானகத்தில் பாய்ந்த மின்சாரம் கண்ணனை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.