விருதுநகர், பிப்.16: விருதுநகரில், மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிஆர்ஓ ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கோரிக்கை தொடர்பாக பெறப்பட்ட 51 முன்னோடி மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. கூட்டத்தில் 16 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் கருவூல மற்றும் கணக்குத்துறையை சேர்ந்த கூடுதல் ஓய்வூதிய இயக்குநர், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.