திருவள்ளூர், மே 31: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் அக்னி வெயில் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் மாதந்தோறும் வழக்கம்போல் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மாதம் தோறும் புதன் கிழமைகளில் நடைபெறும்.
கடந்த மே மாதம் அக்னி வெயில் காரணமாக முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஜூன் மாதத்திலிருந்து வழக்கம் போல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.