தேனி, ஆக. 18: மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை (ஆக. 19) பெரியகுளம்அரசு மருத்துவமனையில் நடக்க உள்ளது. தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பெரியகுளத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நாளை (ஆக. 19) காலை 9.30 மணி முதல் மதியம்1.30 மணி வரை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல்,
மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் செயல்படுத்துதல் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகிவற்றுடன் கலந்து கொண்டு பயனடையலாம். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.