சென்னை, ஏப்.28: சென்னை மாவட் கலெக்டர் அலுவலகம் ேநற்று வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்,’ வரும் 30ம் தேதி (புதன் கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தரை தளத்தில், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையலாம்.