Tuesday, June 6, 2023
Home » மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விநியோகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விநியோகம்

by Ranjith

 

சிவகங்கை, மே. 19: சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மூன்று மாதத் தொகையாக ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. சுமார் 10ஆண்டு காலத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். எஸ்.சி, எஸ்.டி 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்திருக்க வேண்டும்.

பிற அரசு அலுவலகங்களில் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் இவ்வலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை பெற இயலாது. மார்ச் 2021 முதல் டிசம்பர் 2021 வரை காலாண்டுகளுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய பயன்தாரர்களும், தற்போது அரசு வழங்கியுள்ள சிறப்பு சலுகையின்படி நடப்பு காலாண்டில் ஜன.1, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை சுய உறுதிமொழி ஆவணத்துடன் தற்போதைய தேதி வரை குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கி உதவித்தொகை பெறலாம்.

உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi