மார்த்தாண்டம், ஜூலை 5: மார்த்தாண்டம் அருகே பாகோடு கடமகோட்டை சேர்ந்தவர் சுஜாதா (42). இவர் இருசக்கர வாகனத்தில் அவரது மகள் அக்ஷயா (17) என்பவரை பின்னால் அமர வைத்து மேல்புறத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முளவிளை குன்றுவிளையை சேர்ந்த ஜாண் பீட்டர் மகன் அஜின் ஜோன்ஸ் (23) என்பவர் ஒரு சொகுசு காரில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக வந்து சுஜாதா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதினார். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் அக்ஷயா படுகாயம் அடைந்தாா். மேலும் காரை ஓட்டி வந்த அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய அஜின் ஜோன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே கார் மோதி சிறுமி படுகாயம் வாலிபர் மீது வழக்கு
0
previous post