சிவகங்கை: மானாமதுரை அருகே திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கணவன் வீட்டார் அடித்து கொன்றதாக கூறி பெண் வீட்டார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த குவளைவேலி கிராமத்தை சேர்ந்த கண்ணன். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 27 வயதான கோமதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு கண்ணன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது இருந்தே கணவன், மனைவி இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கோமதியின் பெற்றோருக்கு தகவல் சொல்லிவிட்டு அவசர அவசரமாக உடலை மயானத்திற்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோமதியின் உறவினர்கள் மானாமதுரை போலீசில் புகார் அளித்ததுடன் கோமதியை அடித்து கொன்றுவிட்டதாக கணவர் வீட்டார் மீது குற்றம் சாட்டினார். இதனையடுத்து கோமதியின் உடலை மீட்ட போலீசார் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். …
மானாமதுரை அருகே வீட்டிலேயே தூக்கிட்ட நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு: கணவர் வீட்டார் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு
30
previous post