பரமக்குடி, அக்.6: மாநில அளவிலான ஜுடோ போட்டியில் பரமக்குடி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தினை பெற்றனர். மாநில அளவிலான ஜுடோ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியை சார்ந்த மாணவி யுவஸ்ரீபிரபா 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தையும், 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மாணவி வாணிஸ்ரீ மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கத்தினை பெற்றார்.
இந்த மாணவிகள் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜுடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள். வெற்றி பெற்ற மாணவிகளையும் உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, அன்புச்செல்வி ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்லிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஜாஜஹான், தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் ஆகியோர் பாராட்டினர். இறுதியில் நினைவு பரிசினை உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.