Sunday, June 4, 2023
Home » மாநில ஆணழகன் போட்டியில் பங்கேற்ற சேலம் வாலிபர் மயங்கி விழுந்து சாவு

மாநில ஆணழகன் போட்டியில் பங்கேற்ற சேலம் வாலிபர் மயங்கி விழுந்து சாவு

by kannappan

வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர்- விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் ஆணழகன் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 70 கிலோ எடை பிரிவில் மேடை ஏற தயாராக இருந்த சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சார்ந்த ஹரிஹரன் (21) வாம் அப் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென சம்பவ இடத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை குறிஞ்சிப்பாடி அரச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் ஹரிஹரன் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதையடுத்து ஹரிஹரனின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் தந்தை மற்றும் உறவினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். ஹரிஹரன் தந்தை மாத்தையன் கொடுத்த மனுவில், எனது மகனின் இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறியதால் பிரேத பரிசோதனை செய்யாமல் அவரிடம் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது. ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ள தயாராக இருந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi