கிருஷ்ணகிரி, ஜூன் 23: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, அங்குள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால், திடுக்கிட்ட பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், மாணவி கிடைக்காததால், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். அதில், தங்களது மகள் தர்மபுரி மாவட்டம் பாறைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜீவா(22) என்பவருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். எனவே, அவர் தங்கள் மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.