மதுரை, மே 3: இந்திய அஞ்சல் துறையில் சார்பில் ‘கியான்போஸ்ட்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுக்கு தயாராவதற்கான புத்தகங்களை குறைந்த கட்டணத்தில் அஞ்சல்துறை அலுவலகம் மூலம் அனுப்பலாம்.
அனுப்பபடும் புத்தகங்களின் எடை 300 கிராம் முதல் 5 கிலோ வரை இருக்கலாம். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி, அதிகபட்சமாக ரூ.100 மற்றும் ஜிஎஸ்டியாக கட்டணம் வசூலிக்கப்படும். இதை இணையதளத்தில் டிராக் செய்து கொள்ளலாம்.