Sunday, May 28, 2023
Home » மழையில் கீரைக்கு ‘நோ’ சொல்லுங்க !

மழையில் கீரைக்கு ‘நோ’ சொல்லுங்க !

by kannappan

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி*கீரையைப் பொடியாக நறுக்காமல் பெரிதாக நறுக்க வேண்டும். நறுக்கிய உடன் பயன்படுத்த வேண்டும்.*தண்ணீர் நன்கு கொதிக்கும்போது நறுக்கிய கீரையைச் சேர்த்து ‘ஹைஃப்ளேமில்’ வேகவிட வேண்டும். அளவாக நீர் இருப்பது முக்கியம்.*கீரையின் தண்டுப்பகுதி பாதி வெந்தவுடன் இறக்கி மசித்தால் நன்கு மசிந்துவிடும். அவ்வாறு மசிக்கும் போது கல் உப்பினை அளவாக சேர்க்க வேண்டும். அதே சமயம் கீரையை அதிக நேரம் வேக விட்டால் கீரையில் உள்ள உயிர்ச்சத்து சிதைந்துவிடும்.*ஒவ்வொரு வகைக் கீரையிலும் தனிப்பட்ட உலோகச்சத்து உள்ளது. அதனால் 2 அல்லது 3 வகைக் கீரைகளை சேர்த்து சமைக்கக் கூடாது. இதனால் மொத்த சத்தும் சிதைந்து போகும். உடலுக்கும் பாதிப்பு ஏற்படும்.*புளி மற்றும் எரியூட்டும் மசாலாக்கள் சேர்க்காமல் சமைத்தால் கீரையின் இயல்பான முழுச்சத்தும் கிடைக்கும்.*முருங்கை, அகத்திக்கீரைகள் ஜீரணம் ஆக மிக நேரம் ஆகும். சிலருக்கு வயிற்றுவலி கூட ஏற்படும். அதனால் இவைகளை வேக வைத்து நீரை வடித்து அதனை சூப்பாகப் பயன்படுத்தலாம்.*மழை காலத்தில் கீரை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதற்குக் காரணம், மழை காலத்தில் பூச்சிகள் கீரை இலைகளின் அடியில் முட்டையிட்டிருக்கும். சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் ஒவ்வாமை, வயிற்றுக் கோளாறுகளைச் சந்திக்க நேரிடும்.*கீரை ஜீரணம் ஆக அதிக நேரமாகும் என்பதால் கீரையை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.*உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான சிவப்பு ரத்த அணுக்களின் விருத்திக்கு மிக முக்கியமான இரும்புச்சத்து எல்லா வகைக்கீரைகளிலும் பொதுவாக உள்ளது.*தினசரி உணவில் கீரை ஒரு அங்கமாக அமைந்துவிட்டால் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். பெண்களை பரவலாகப் பாதிக்கும் அனீமியா என்ற ரத்த சோகை வரவே வராது.*கீரைக்காக நாம் செலவழிக்கும் சிறு தொகை, ஆயிரக்கணக்காக வைத்தியச் செலவை மிச்சப்படுத்தும். மஞ்சள் உலோகமான தங்கத்தைவிட இந்தப்பச்சைத் தங்கம் என்கிற கீரை பன்மடங்கு உயர்ந்தது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi