தஞ்சாவூர், ஜூலை 26: மருதுபாண்டியர் கல்லூரியில் நுணணுயிரியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு மைய துவக்க விழா நடைபெற்றது. விழாவில் மருத்துபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருதபாண்டியன் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் விஜயா, துணை முதல்வர் தங்கராஜ், விஞ்ஞானி ஞானபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பிரின்ஸ், கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.