Tuesday, September 26, 2023
Home » மரத்தில் சுற்றுலா வேன் மோதி 22 பேர் காயம்

மரத்தில் சுற்றுலா வேன் மோதி 22 பேர் காயம்

by Karthik Yash

நாமக்கல், ஆக.5: ஈரோட்டில் இருந்து கொல்லிமலை கோயிலுக்கு சென்ற சுற்றுலா வேன், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 22 பேர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 22 பேர் சுகுணா என்பவரது தலைமையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வேனில் வந்தனர். பூவேந்திரன் என்பவர் வேனை ஓட்டி வந்தார். கொல்லிமலை ஆரியூர்நாடு போடாம்பில்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடிய வேன், சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், டிரைவர் பூவேந்திரன் உட்பட 22 பேரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு, செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேர், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்து குறித்த தகவல் அறிந்த கலெக்டர் உமா மற்றும் ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் அறிவுறுத்தினர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?